எப்படியிருக்கேன்!
என்றாய் ஒரு நாள் உன்
புகைப்படம் ஒன்றைக் காட்டி..
வழக்கம் போல
வேடிக்கையாய் பேசி
விடைபெற்றுக் கொண்டேன்
இன்னும் பார்த்துக் கொண்டே
இருக்கிறேன் எப்படி
இருக்கிறாய் என்று?
அன்று கேட்ட நீ
அடுத்த வேலைப் பார்க்க
சென்று விட
எப்போது வருவாய்
என்று உன்னை
கேட்பதே என்
வேலையாகிவிட்டது
அகர முதல
எழுத்தெல்லாம்
அவள் பெயரே என
நான்
வடம் இழந்த தேராய்
வலுவிழந்த புயலாய்
செயல் மறந்த மதியாய்
உனை சேராதிருப்பது
என் விதியா என
எப்படியிருக்கேன்! என
நீ காட்டிய புகைப்படத்தை
பார்த்து புலம்பியவாறே.....
என்றாய் ஒரு நாள் உன்
புகைப்படம் ஒன்றைக் காட்டி..
வழக்கம் போல
வேடிக்கையாய் பேசி
விடைபெற்றுக் கொண்டேன்
இன்னும் பார்த்துக் கொண்டே
இருக்கிறேன் எப்படி
இருக்கிறாய் என்று?
அன்று கேட்ட நீ
அடுத்த வேலைப் பார்க்க
சென்று விட
எப்போது வருவாய்
என்று உன்னை
கேட்பதே என்
வேலையாகிவிட்டது
அகர முதல
எழுத்தெல்லாம்
அவள் பெயரே என
நான்
வடம் இழந்த தேராய்
வலுவிழந்த புயலாய்
செயல் மறந்த மதியாய்
உனை சேராதிருப்பது
என் விதியா என
எப்படியிருக்கேன்! என
நீ காட்டிய புகைப்படத்தை
பார்த்து புலம்பியவாறே.....
No comments:
Post a Comment